இந்தியாவின் வண்ணப்பூச்சு தொழில் துறையில் வளர்ச்சியடைவதை நோக்கமாகக் கொண்ட ஒரு மூலோபாய நடவடிக்கையில், அக்ஸோநோபல் இந்தியா நிறுவனத்தை கையகப்படுத்த JSW பெயிண்ட்ஸ் இறுதி ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது
சென்னை, ஜூன் 27, 2025: பங்கு கொள்முதல் ஒப்பந்தத்தின் கீழ் ரூ. 8,986 கோடி வரையிலான ஒரு அதிகபட்ச விலையில், சில இறுதி சரிசெய்தல்களுக்கு உட்பட்டு, அக்ஸோ நோபல் இந்தியா லிமிடெட் (“ANIL”) நிறுவனத்தில் 74.76% வரையிலான பங்குகளை அக்ஸோ நோபல் N.V. மற்றும் அதன் துணை நிறுவனங்களிடமிருந்து கையகப்படுத்துவதற்கான உறுதியான ஒப்பந்தங்களில் JSW பெயிண்ட்ஸ் லிமிடெட் (“JSW Paints”) இன்று கையெழுத்திட்டது ("முன்மொழியப்பட்ட பரிவர்த்தனை").
இந்த முன்மொழியப்பட்ட பரிவர்த்தனை காம்பெடிஷன் கமிஷன் ஆஃப் இந்தியா இன் ஒப்புதலுக்கும், ANIL இன் பொது பங்குதாரர்களுக்கு ஒரு கட்டாய டெண்டர் வழங்கல் (“Open Offer”) ஐ நிறைவு செய்வதற்கும் உட்பட்டது.
US$ 23 பில்லியன் மதிப்புள்ள JSW குழுமத்தின் ஒரு பகுதியான JSW பெயிண்ட்ஸ் இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் வண்ணப்பூச்சு நிறுவனமாகும் மேலும் எஃகு, சிமென்ட், ஆற்றல் உள்கட்டமைப்பு, ஆட்டோமோட்டிவ் மற்றும் பெயிண்ட்ஸ் உள்ளிட்ட B2B மற்றும் B2C துறைகளின் பல்வேறு பிரிவுகளில் பரந்த செயல்பாடுகளைக் கொண்ட இந்தியாவின் முன்னணி கூட்டு நிறுவனமாக JSW குழுமம் திகழ்கிறது. ANIL இந்தியாவின் முன்னணி அலங்கார மற்றும் தொழில்துறை பெயிண்ட்ஸ் நிறுவனங்களில் ஒன்றாகும் மற்றும் அலங்கார பெயிண்ட்ஸ் மற்றும் தொழில்துறை வண்ணப்பூச்சுகளில் உலகின் முன்னணி நிறுவனமான, நெதர்லாந்தில் தலைமையிடத்தைக் கொண்டுள்ள அக்ஸோ நோபல் நிறுவனத்தின் ஒரு பகுதியாகும்.
இந்த மாற்றத்தை ஏற்படுத்தும் கையகப்படுத்தல், JSW பெயிண்ட்ஸ் நிறுவனத்தை இந்தத் துறையில் முக்கிய நிறுவனங்களில் ஒன்றாக நிலைநிறுத்துகிறது. இது வரும் ஆண்டுகளில் வலுவான வளர்ச்சியைக் காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
JSW பெயிண்ட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பார்த் ஜிண்டால் கூறுகையில் "பெயிண்ட்ஸ் & கோட்டிங்ஸ் என்பது இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் துறைகளில் ஒன்றாகும். இந்த துறையில், JSW பெயிண்ட்ஸ் மிக வேகமாக வளர்ந்து வரும் நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது. அக்ஸோ நோபல் இந்தியா நிறுவனம் டுலக்ஸ், இன்டர்நேஷனல் மற்றும் சிக்கென்ஸ் போன்ற உலகப் பிரபலமான பெயிண்ட் & கோட்டிங்ஸ் பிராண்டுகளுக்கு தாயகமாக உள்ளது. அவர்களை JSW குடும்பத்தில் வரவேற்பதில் நாங்கள் மிகவும் உற்சாகமாக உள்ளோம். ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் பங்குதாரர்கள் அடங்கிய அக்ஸோ நோபல் இந்தியா நிறுவனத்தின் குடும்பத்தினர் அனைவருடனும் இணைந்து, எதிர்கால வண்ணப்பூச்சு நிறுவனத்தை கட்டியெழுப்ப நாங்கள் விரும்புகிறோம். டுலக்ஸ் இன் மாயாஜாலம் மற்றும் JSW பெயிண்ட்ஸ் இன் சிந்தனை வளம் ஆகியவற்றைக் கொண்டு, வாடிக்கையாளர்களை மகிழ்விப்பதுடன், எங்கள் பங்குதாரர்களுக்கு நீடித்த மதிப்பை உருவாக்க நாங்கள் எதிர்நோக்குகிறோம்." என்று கூறினார்.
"எங்கள் உத்தியை செயல்படுத்துவதில் இந்தப் பரிவர்த்தனை ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக இருக்கிறது. அக்ஸோநோபல் இந்தியா தொடர்ந்து ஒரு வலுவான செயல்பாட்டாளராக இருந்துவருகிறது, மேலும் இதை வெற்றியடையச் செய்த பிராண்ட் மற்றும் திறமை குறித்து நாங்கள் பெருமைப்படுகிறோம். JSW உடன், இந்தத் துறையில் ஆழ்ந்த உள்ளூர் நிபுணத்துவம் மற்றும் வலுவான லட்சியங்களைக் கொண்ட ஒரு நீண்டகால கூட்டாளரின் கைகளில் இந்த வணிகம் இருப்பதாக நாங்கள் உறுதியாக நம்புகிறோம்" என்று அக்ஸோநோபல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கிரெக் பௌக்ஸ்-கிய்யும் கூறினார்.
இந்தப் பரிவர்த்தனையில் JSW பெயிண்ட்ஸ் நிறுவனத்தின் பிரத்யேக நிதி ஆலோசகராக மோர்கன் ஸ்டான்லி நிறுவனம் செயல்பட்டது. கைத்தான் & கோ. சட்ட ஆலோசகராகச் செயல்பட்டது. நிதி மற்றும் வரி ஆகியவற்றிற்குத் தேவையான சிரத்தை ஆலோசகராக டெலாய்ட் செயல்பட்டது.
JSW பெயிண்ட்ஸ் நிறுவனம் பற்றி:
2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட JSW பெயிண்ட்ஸ், அலங்கார பெயிண்ட்கள் மற்றும் தொழில்துறை பூச்சுகளின் பல்வேறு போர்ட்ஃபோலியோக்களைக் கொண்டுள்ள, இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் பெயிண்ட் நிறுவனங்களில் ஒன்றாக இன்று இருக்கிறது. தயாரிப்பு மற்றும் செயல்முறை புதுமை, நுகர்வோரை ஈர்க்கும் பிராண்ட் சந்தைப்படுத்தல், அதிநவீன உற்பத்தி வசதிகள் மற்றும் ஒரு விரிவடைந்து வரும், இந்தியா முழுவதுமான விநியோக வலையமைப்பு ஆகியவற்றின் நீண்டகால வரலாற்றைக் கொண்ட இந்த நிறுவனம், இந்திய பெயிண்ட் துறையில் புரட்சி ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
JSW குழுமம் பற்றி
23 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள JSW குழுமம் இந்தியாவின் முன்னணி கூட்டு நிறுவனங்களில் ஒன்றாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. எஃகு, எரிசக்தி, உள்கட்டமைப்பு, சிமென்ட், பெயிண்ட்ஸ், B2B இ-வணிகம், துணிகர மூலதனம், பாதுகாப்பு, சுற்றுச்சூழல் உகந்த இயக்கம் மற்றும் விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் JSW இன் புதுமையான மற்றும் நிலையான இருப்பு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை இயக்குவதில் ஒரு முக்கிய பங்கு வகிக்க இந்த குழுமத்திற்கு உதவுகிறது. பெரிய மூலதன செறிவு மற்றும் தொழில்நுட்ப ரீதியாக சவாலான திட்டங்கள், வேறுபட்ட தயாரிப்பு-கலவை, அதிநவீன உற்பத்தி வசதிகள் மற்றும் நிலையான வளர்ச்சியைத் தொடர்வதில் ஒரு அதிக கவனம் செலுத்துதல் ஆகியவற்றை செயல்படுத்துவதில் ஒரு வெற்றிகரமான சாதனைப் பதிவு உட்பட அதன் பலம் மற்றும் திறன்களைப் பயன்படுத்துவதன் மூலம் இந்த குழுமம் சிறந்து விளங்க முயற்சிக்கிறது. இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்கா முழுவதும் பரந்து விரிந்திருக்கும் ஒரு கலாச்சார ரீதியாக வேறுபட்ட பணியாளர்களுடன், JSW குழுமம் நேரடியாக 44,000க்கும் அதிகமான பணியாளர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளது. அதன் ஆலை மற்றும் துறைமுக இடங்களைச் சுற்றி வசிக்கும் உள்ளூர் சமூகங்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு வலுவான சமூக மேம்பாட்டு மையத்தையும் இது கொண்டுள்ளது. JSW குழுமம், அதன் வளர்ச்சித் திட்டம், விதிவிலக்கான செயல்படுத்தும் திறன்கள் மற்றும் #BetterEveryday ஒவ்வொருநாளும் சிறந்தது என்பதற்கான ஒரு இடைவிடாத உந்துதல் ஆகியவற்றை ஒருங்கிணைப்பதன் மூலம் அதன் அனைத்து பங்குதாரர்களுக்கும் மதிப்பை உருவாக்குவதில் புகழ்பெற்றது.