Thursday, June 19, 2025

இளம் குழந்தைகள் மீண்டும் வலுவுடன் மீண்டெழ உதவுகிறது

இளம் குழந்தைகள் மீண்டும் வலுவுடன் மீண்டெழ உதவுகிறது

Photo Caption(L to R): Dr Lokesh Sharma, Paediatric Orthopaedic Surgeon, Apollo Children's Hospitals; Dr R Sankar, Senior Consultant, Paediatric Orthopaedic & Spine Surgeon; Dr Ilankumaran Kaliamoorthy, CEO, Apollo Hospitals Chennai Region; Dr Anil BG, Director of Medical Services, Cluster 1, Apollo Hospitals Chennai

சென்னை, அப்போலோ குழந்தைகள் மருத்துவமனை, தமிழ்நாட்டின் முதல் குழந்தை எலும்பியல் மருத்துவம், விபத்து மற்றும் அவசர கால சிகிச்சைக்களுக்கான சிறப்பு சிகிச்சை மையத்தைத் தொடங்குகிறது!

சென்னை, ஜூன் 19, 2025: சென்னை, அப்போலோ  குழந்தைகள் மருத்துவமனை [Apollo Children's Hospital, Chennai], இன்று தமிழ்நாட்டின் முதல் குழந்தை எலும்பியல் மருத்துவம், விபத்து மற்றும் அவசர கால சிகிச்சைகளுக்கான சிறப்பு சிகிச்சை மையத்தைத் [Tamil Nadu's first Centre of Excellence in Pediatric Orthopedics and Trauma Care] தொடங்குவதாக அறிவித்தது. குழந்தைகள் விளையாட்டில் அடையும் வழக்கமான காயங்கள் முதல் பிறக்கும் போதே இருக்கும் சிக்கலான நிலைமைகள் வரை, சிறப்பு எலும்பியல் சிகிச்சை தேவைப்படும் குழந்தைகளுக்கான மாநிலத்தின் முதன்மையான சிகிச்சை மையமாக இது செயல்படும். அப்போலோ மருத்துவமனையின் சென்னை வளாகத்தில் அனுபவம் வாய்ந்த குழந்தை எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள், விபத்து மற்றும் அவசர கால சிகிச்சை நிபுணர்கள் மற்றும் மறுவாழ்வு பராமரிப்பு குழுக்களை [pediatric orthopedic surgeons, trauma specialists, rehabilitation teams] இந்த சிறப்பு சிகிச்சை மையம் ஒரே தளத்தில் ஒன்றிணைக்கிறது. அப்போலோ மருத்துவமனை குழந்தை மருத்துவத்தில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருவதற்கு அடையாளமாக இந்த  குழந்தை எலும்பியல் மருத்துவம், அவசரகால சிகிச்சை மையம் அமைந்திருக்கிறது. மேலும் தென்னிந்தியா முழுவதிலும் குழந்தைகளின் எலும்பு மற்றும் மூட்டு பிரச்சினைகளுக்கான சிறப்பு சிகிச்சை நிபுணர்களுக்கு அதிகரித்து வரும் தேவையை இம்மையம் பூர்த்தி செய்யும் விதமாக செயல்படும்.

சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் எலும்பியல் தொடர்பான மருத்துவ பராமரிப்பு தேவைப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும் சென்னையிலுள்ள குழந்தை மருத்துவ நிபுணர்கள், விளையாட்டு மைதானங்களில் ஏற்படும் காயங்கள் முதல் உடனடியாக அறுவை சிகிச்சை தேவைப்படும் கிளப்ஃபுட் மற்றும் இடுப்பில் ஏற்படும் ஹிப் டிஸ்ப்ளாசியா [clubfoot & hip dysplasia] போன்ற பிறவிலேயே இருக்கும் நிலைமைகள் வரையிலான பிரச்சினைகள் உள்ள குழந்தைகளை அதிகம் எதிர்கொண்டு வருகின்றனர். இதை சமாளிக்கும் வகையில் விரைவான மற்றும் பயனுள்ள குழந்தை சார்ந்த எலும்பியல் பராமரிப்புக்கான தேவையை இந்த சிறப்பு சிகிச்சை மையம் பூர்த்தி செய்கிறது.

பிறவியிலேயே இருக்கும் எலும்பு சார்ந்த பிரச்சினைகள் மற்றும் வளர்ச்சி கோளாறுகள், மூட்டு குறைபாடுகள், நரம்புத்தசை பிரச்சினைகள், காயங்கள், தொற்றுகள் மற்றும் குழந்தைகளின் எலும்புகள் மற்றும் மூட்டுகளைப் பாதிக்கும் கட்டிகள் [pediatric orthopedic conditions, including congenital and developmental disorders, limb deformities, neuromuscular issues, injuries, infections, tumors] உள்ளிட்ட குழந்தை எலும்பியல் மருத்துவ நிலைமைகளுக்கு சிகிச்சையளிப்பதில் இந்த  சிறப்புக்குழு நிபுணத்துவம் பெற்றது. இந்த சிகிச்சைகளில் முதுகெலும்பு குறைபாடுகள் மற்றும் நடப்பதில் இருக்கும் வழக்கத்திற்கு மாறாக இருக்கும் பிரச்சினைகளுக்கும் தீர்வுகள் இருக்கின்றன.

அப்போலோ  குழந்தைகள் மருத்துவமனையின் மூத்த ஆலோசகர் குழந்தை எலும்பியல் மற்றும் முதுகெலும்பு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஆர். சங்கர் [Dr. R. Sankar, Sr. Consultant Pediatric Orthopedic & Spine Surgeon, Apollo Children’s Hospitals] கூறுகையில், "இந்த சிறப்பு சிகிச்சை மையத்தின் அறிமுகமானது, தமிழ்நாட்டில் குழந்தை தசைக்கூட்டு பராமரிப்பில் [pediatric musculoskeletal care] ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிக்கும் வகையில் அமைந்திருக்கிறது. காயங்கள் அல்லது குறைபாடுகளுக்கு சிகிச்சையளிப்பது மட்டுமல்ல, ஒவ்வொரு குழந்தையும் வழக்கமான முழு செயல்பாடுகளை மேற்கொள்ள செய்வதையும், உடல் அசைவுகளிலான இயக்கத்தை பெறுவதிலும், முழு நம்பிக்கையுடன் திரும்புவதையும் உறுதி செய்வதே எங்களுடைய குறிக்கோளாக இருக்கிறது. மிகவும் மேம்பட்ட நவீன அறுவை சிகிச்சை தொழில்நுட்பங்கள் மற்றும் பன்னோக்கு சிறப்பு சிகிச்சை நிபுணர்களின் ஆதரவையும் பெற்றிருப்பதால், வழக்கமான விளையாட்டு காயங்கள் முதல் குழந்தைகளில் காணப்படும் மிகவும் சிக்கலான எலும்பியல் பிரச்சினைகள் வரை அனைத்தையும் திறம்பட கையாள நாங்கள் தயாராக உள்ளோம்." என்றார்.

அப்போலோ  மருத்துவமனையின் சென்னை மண்டல தலைமை செயல் அதிகாரி டாக்டர் இளங்குமரன் காளியமூர்த்தி [Dr. Ilankumaran Kaliamoorthy, CEO - Chennai Region, Apollo Hospitals] கூறுகையில், ‘’குழந்தைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு முற்றிலும் மாறுபட்ட அணுகுமுறை தேவைப்படுகிறது.  குழந்தைகளுக்கு ஏற்ற, அவர்களை அக்கறையுடன் கவனித்து கொள்ளும் முறை மற்றும் நவீன மருத்துவ பராமரிப்பை ஒருங்கிணைத்திருப்பது இந்த சிறப்பு சிகிச்சை மையம் மற்ற சிகிச்சை மையங்களிலிருந்து தனித்துவமிக்கதாக  மாற்றியிருக்கிறது. சிகிச்சைக்குப் பிறகு இயல்பு நிலைக்கு திரும்பும் வரை தங்கியிருக்கும் அறைகளில், குழந்தைகளை உற்சாகப்படுத்தும் விதமாக அவர்கள் ஈடுபடக்கூடிய அம்சங்களைக் கொண்ட  சுவர்கள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன. அதே நேரம்,  உடல்ரீதியான சிகிச்சைகளுக்கான பகுதிகள், சிகிச்சை அறைகளைப் போல் இல்லாமல், குழந்தைகள் விளையாட்டைப் போல் உணரும் வகையிலான மருத்துவ உபகரணங்கள் இருப்பதால், குழந்தைகளின் மறுவாழ்வு பயிற்சிகளை எளிதில் செய்யத் தூண்டுகிறது.  15 ஆண்டுகளுக்கும் மேலாக, ஆழ்ந்த அனுபவமிக்க நிபுணத்துவம் மற்றும் அர்ப்பணிப்புடன் கூடிய அக்கறை இவை இரண்டும், குழந்தை மருத்துவத்தில் வரையறைக்கான ஒரு அளவுகோலாக எங்களது மையத்தை முக்கியத்துவம் பெறச் செய்திருக்கிறது’’ என்றார்.

இந்த சிறப்பு சிகிச்சை மையத்தில் குழந்தை மருத்துவ நடைமுறைகளுக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட சிறப்பு உபகரணங்கள் உள்ளன. இதில் சிறிய நோயாளிகளுக்கு ஏற்றவகையில் திறம்பட செயல்படும் இமேஜிங் சிஸ்டம்கள் மற்றும் குழந்தைகளின் உடற்கூறியல் அளவிற்கு ஏற்ற அளவிலான அறுவை சிகிச்சை கருவிகள் ஆகியவையும் அடங்கும். அறுவை சிகிச்சை அரங்குகளில் மேம்பட்ட காட்சிப்படுத்தல் தொழில்நுட்பம் உள்ளது. இத்தொழில்நுட்பம் அறுவை சிகிச்சை நிபுணர்கள் மென்மையான, வளரும் திசுக்களில் துல்லியமாக அறுவை சிகிச்சை செய்ய உதவுகிறது. இந்த மையம் மாதந்தோறும் 140 மருத்துவ நடைமுறைகளைக் கையாளக் கூடிய திறன் பெற்றது. மேலும் பெற்றோர்கள் தனிப்பட்ட முறையில் என்னென்ன சிகிச்சைகள் தேவை என்பது பற்றி விவாதிக்கக்கூடிய ஆலோசனைகளும் அடங்கும்.

அவசரகால விபத்து சேவைகளில் குழந்தை நோயாளிகளுக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட மருத்துவ நெறிமுறைகளும் உள்ளன. எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்களைத் தவிர, நிபுணர்கள் குழுவில் மென்மையான திசு தொடர்பான சிக்கலான சிகிச்சைகளுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர்கள், ரத்த ஓட்டம் பிரச்சினைகளுக்கான வாஸ்குலர் நிபுணர்கள் மற்றும் அறுவை சிகிச்சையின் போது இளம் நோயாளிகளை நிர்வகிப்பதில் அனுபவம் வாய்ந்த குழந்தை மயக்க மருந்து நிபுணர்கள் என பல்துறை நிபுணர்கள் இடம்பெற்று உள்ளனர்.

தமிழ்நாட்டின் முன்னணி குழந்தை மருத்துவ சுகாதார நிறுவனம் என்ற நற்பெயரை அப்போலோ  குழந்தைகள் மருத்துவமனை தொடர்ந்து பெற்று வருகிறது. இந்த புதிய  சிறப்பு சிகிச்சை மையம், தங்கள் குழந்தைகளுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க விரும்பும் குடும்பங்களுக்கு ஏற்ற இடமாக, தனது முக்கியத்துவத்தை மேலும் மேலும் வளர்த்தெடுத்து வருகிறது.. மேலும் சவாலான காலங்களில் குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கு என்ன தேவை என்பதைப் பற்றிய உண்மையான புரிதலுடன் மருத்துவ நிபுணத்துவத்தை துல்லியமாக அளிப்பதால் அப்போலோ மருத்துவமனைகள் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது.

அப்போலோ மருத்துவமனை பற்றி:

1983-ல் டாக்டர் பிரதாப் சி ரெட்டி சென்னையில் இந்தியாவிலேயே முதல் முறையாக மிகப் பெரிய கார்ப்பரேட் மருத்துவமனையைத் தொடங்கியதன் மூலம் ஒரு முன்னோடி முயற்சியை மேற்கொண்டார். அப்போது இந்தியாவில் அப்போலோ ஒரு மிகப் பெரிய மருத்துவப் புரட்சியை ஏற்படுத்தியது. இன்று ஆசியாவிலேயே மிகவும் நம்பகமான ஒருங்கிணைந்த மருத்துவ நல குழுமமாக திகழும் அதில், உலகம் முழுவதும் 10,000-க்கும் அதிகமான படுக்கை வசதிகளுடன், 74 மருத்துவமனைகள், சுமார் 6600 மருந்தகங்கள், 400-க்கும் அதிகமான கிளினிக்குகள், 2182 மருத்துவ பரிசோதனை மையங்கள், 800-க்கும் அதிகமான டெலி மெடிசின் மையங்கள், 15-க்கும் மேற்பட்ட மருத்துவ கல்வி மையங்கள் மற்றும் உலகளாவிய மருத்துவ பரிசோதனைகளுடன் கூடிய ஆராய்ச்சி அறக்கட்டளை என உலகின் மிகப் பெரிய ஒருங்கிணைந்த மருத்துவ சேவை வழங்கும் நிறுவனமாக அப்போலோ உள்ளது. தென்கிழக்கு ஆசியாவிலேயே முதன்முறையாக சென்னையில் முதல் புரோட்டான் சிகிச்சை மையத்தை நிறுவுவதற்காக அண்மையில் முதலீடு செய்துள்ளது. 

ஒவ்வொரு 4 நாட்களுக்கு அப்போலோ மருத்துவமனை குழுமம் பல லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. சர்வதேச தரத்திலான மருத்துவ சிகிச்சை முறைகளை எல்லோருக்கும் எளிதில் கிடைக்கச் செய்வதையே தனது தொலைநோக்குப் பார்வையாக கொண்டு அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு தனிநபருக்கும் உலகத் தரத்திலான சிகிச்சையை அளிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்படும் அதன் பங்களிப்பை கெளரவிக்கும் விதமாக சிறப்பு தபால் தலையை இந்திய அரசு வெளியிட்டுள்ளது. கடந்த 2010-ல் அப்போலோ மருத்துவமனைகள் தலைவர், டாக்டர் பிரதாப். .சி. ரெட்டிக்கு பத்மவிபூஷன் விருது வழங்கி கெளரவித்தது.

கடந்த 40 ஆண்டுகளாக, மருத்துவ ஆராய்ச்சிகள், சர்வ தேசத் தரத்திலான மருத்துவ சேவைகள், அதி நவீன தொழில் நுட்பம் ஆகியவற்றில் அப்போலோ மருத்துவமனைகள் குழுமம் தொடர்ந்து சிறந்து விளங்குவதுடன் தனது தலைமைத்துவத்தை தொடர்ந்து பேணி வருகிறது. மருத்துவ சேவைகளுக்காக நாட்டில் சிறந்து விளங்கும் மருத்துவமனைகளில் தொடர்ந்து தர வரிசையில் அதன் மருத்துவமனைகள் முன்னணியில் இருந்து வருகின்றன.