Friday, March 7, 2025

நெக்ஸ்ட் பாரத் வென்ச்சர்ஸ் நிறுவனம்,‘The Why Club’ அறிமுகப்படுத்துகிறது, 13 தாக்கமுள்ள தொழில்முனைவோரின் தொடக்கக் குழுவை அறிவித்தது

நெக்ஸ்ட் பாரத் வென்ச்சர்ஸ் நிறுவனம்,‘The Why Club’ அறிமுகப்படுத்துகிறது, 13 தாக்கமுள்ள தொழில்முனைவோரின் தொடக்கக் குழுவை அறிவித்தது


நெக்ஸ்ட் பாரத் வென்ச்சர்ஸ், ஒரு 4 மாத ரெசிடென்சி ப்ரோக்ராம் ஐத் தொடர்ந்து, 1500 க்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்களின் ஒரு தொகுப்பில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 13 ஸ்டார்ட்அப்களின் முதல் குழுவை அறிவித்துள்ளது.  



இந்த தாக்க முதலீட்டு நிறுவனம், The Why Club  இல் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட தொடக்க நிறுவனங்களுக்கு மொத்தம் 9 கோடி ரூபாய் ஆரம்ப நிதியை ஒதுக்கியுள்ளது மற்றும் உறுப்பினர்களுக்கு ஆண்டுதோறும் தொடருகின்ற ‘பே-இட்-ஃபார்வர்ட்’ 'அதை முன்னோக்கி செலுத்துங்கள்' என்ற உறுப்பினர் திட்டத்தை அமல்படுத்தியுள்ளது.  


தன்னிறைவு மற்றும் நோக்கம் சார்ந்த சமூகத்தை உருவாக்கும் ஒரு தொலைநோக்குடன், இந்த The Why Club, நீடித்த தாக்கத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்தும் ‘எலிஃபண்ட’ தொழில்முனைவோரை ஆதரிக்கிறது. மூலதனம், வழிகாட்டுதல் மற்றும் மூலோபாய ஆதரவு ஆகியவற்றிற்கான அணுகல் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும்.  


நெக்ஸ்ட் பாரத் வென்ச்சர்ஸ், மே 19, 2025 முதல் தொடங்க திட்டமிடப்பட்டிருக்கும் ரெசிடென்சி ப்ரோக்ராம் இன் அடுத்த தொகுதிக்கான விண்ணப்பங்களைத் திறக்கின்றதையும் அறிவித்துள்ளது.

சென்னை, மார்ச் 03, 2025: சுஸூகி மோட்டார் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் துணை நிறுவனமான நெக்ஸ்ட் பாரத் வென்ச்சர்ஸ், தாக்கமுள்ள தொழில்முனைவோருக்காக மற்றும் அவர்களால் உருவாக்கப்பட்ட ஒரு சமூகமான The Why Club இன் அறிமுகத்தை 


அறிவித்தது. இந்த முயற்சி, 13 நோக்கம் சார்ந்த தொடக்க நிறுவனங்களை ஒன்றிணைக்கிறது, இதில் 50 சதவீதம் நிறுவனர்கள் பெண்கள் ஆவார்கள். இந்த தொடக்க நிறுவனங்கள் நெக்ஸ்ட் பாரத் நிறுவனத்தின் முதன்மையான ரெசிடென்சி ப்ரோக்ராம் முதல் குழுவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவை. இந்தியாவில் தாக்கமுள்ள தொழில்முனைவு தாக்கத்தை ஏற்படுத்துவதற்கான ஒரு வலுவான சக-ஆதரவு சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதில் இது ஒரு முக்கியமான முயற்சியைக் குறிக்கிறது.

இந்த முன்முயற்சியின் ஒரு பகுதியாக, நெக்ஸ்ட் பாரத் வென்ச்சர்ஸ் நிறுவனம் குழு உறுப்பினர்களின் முதலீட்டுத் தயார்நிலையை மதிப்பீடு செய்து, தேர்ந்தெடுக்கப்பட்ட தொடக்க நிறுவனங்களுக்கு அவர்களின் வளர்ச்சிக்கும், தாக்கத்தை அளவிடுவதற்கும் ஆதரவாக, ஒவ்வொன்றுக்கும் 1 கோடி முதல் 5 கோடி ரூபாய் வரை கூடுதல் நிதியை வழங்க திட்டமிட்டுள்ளது. முதல் குழு முற்றிலும் அடுக்கு 2 மற்றும் அடுக்கு 3 பிராந்தியங்களின் தொலைதூர கிராமப்புறங்களைச் சேர்ந்த தாக்கமுள்ள தொழில்முனைவோரைக் கொண்டுள்ளது. இவர்கள் கிராமப்புற வாழ்வாதாரங்களில் உள்ள முக்கியமான இடைவெளிகளை நிவர்த்தி செய்வதற்கும், நிலையான விவசாயம், கரிம உணவு உற்பத்தி மற்றும் நியாயமான வணிக நடைமுறைகள் ஆகியவற்றின் மூலம் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கும் உறுதிபூண்டுள்ளனர்.

இந்த முயற்சிக்கான திட்டத்தைப் பகிர்ந்து கொண்டபோது, நெக்ஸ்ட் பாரத் வென்ச்சர்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி விபுல் நாத் ஜிந்தல் கூறுகையில்:  "உலகின் மிகப்பெரிய தன்னிறைவு மற்றும் இணை சார்ந்த தாக்கமுள்ள தொழில்முனைவோரின் சமூகமாக, The Why Club இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இந்தியாவில் சமூக தாக்கம் ஏற்படுத்தும் தொழில்முனைவுக்கான ஒரு தனி வகையை உருவாக்கும் பணியில் நாங்கள் உள்ளோம். தொடக்க நிறுவன நிறுவனர்கள் பெரும்பாலும் தனிமையில் அவர்களின் மிகப்பெரிய சவால்களை எதிர்கொள்கிறார்கள் என்பதை நாங்கள் கவனித்துள்ளோம் —அவர்கள் தங்கள் பயணத்தில் தனியாக இருப்பதாக ஒருபோதும் உணராதவாறு இருப்பதை நாங்கள் உறுதிபடுத்த விரும்புகிறோம். இந்த நோக்கத்துடன், அவர்கள் மூலதனம் மற்றும் உலகளாவிய நெட்வொர்க்குகளுக்கான அணுகலைப் பெறுகின்ற அதேவேளையில் தங்கள் சக தொழில்முனைவோருடன் இணைந்து பணியாற்றவும், அறிவு, வளங்கள் மற்றும் ஊக்கத்தை பரிமாறிக் கொள்ளவும், நாங்கள் ஒரு தளத்தை உருவாக்குகிறோம்."என்று கூறினார்.


The Why Club அதன் உறுப்பினர்களுக்கு அவர்களின் தாக்கத்தை அளவிடுவதற்குத் தேவையான அனைத்து வளங்களையும் உறுதிப்படுத்துகின்ற ஒரு கட்டமைக்கப்பட்ட ஆதரவு அமைப்பை வழங்குகிறது. இதில் தொடக்க நிறுவனர்கள் தங்கள் தொழில்முனைவுசார் பயணத்தைத் தொடர உதவும் வகையில் வடிவமைக்கப்பட்ட, ஆண்டுதோறும் தொடரும் சமூக-ஆதரவு நிதி முறையான ‘பே-இட்-ஃபார்வர்ட் உறுப்பினர் திட்டம்’ அடங்கும். உறுப்பினர்கள் அனுபவம் வாய்ந்த தொடக்க நிறுவனர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் அடிநிலை தலைவர்கள் ஆகியோரின் வழிகாட்டுதலையும், சந்தை வாய்ப்புகளுக்கான அணுகலையும், மூலோபாய வணிக வளர்ச்சிக்கான ஆதரவையும் பெறுவார்கள். கூடுதலாக, இந்த கிளப் இந்தியா-ஜப்பான் ஒத்துழைப்புகளை ஊக்குவிப்பதன் மூலம் தாக்கமுள்ள தொடக்க நிறுவங்கள் உலகளாவிய அளவில் விரிவாக்க உதவும்.  

நெக்ஸ்ட் பாரத் வென்ச்சர்ஸ் நிறுவனத்தின் முதலீட்டு தத்துவம், அவர்கள் பணியாற்றும் நோக்கங்களில் ஆழமாக வேரூன்றியுள்ள நோக்கம் சார்ந்த தொழில்முனைவோரை அடையாளம் கண்டு ஆதரிப்பதில் மையமாக உள்ளது. இந்த தேர்வு செயல்முறையானது, வழக்கமான வணிக அளவுகோல்களுடன் நோக்கம், உறுதிப்பாடு மற்றும் நீண்டகால தாக்க திறன் ஆகியவற்றை முக்கியப்படுத்துகிறது. விரைவான அளவிடுதல் மற்றும் மதிப்பீடுகளில் கவனம் செலுத்தும் பாரம்பரிய நிதியளிப்பு மாதிரிகளிலிருந்து விலகி, நெக்ஸ்ட் பாரத் வென்ச்சர்ஸ், ‘எலிஃபண்ட் தொழில்முனைவோரை’ உருவாக்குவதற்காக ஒரு நிதானமான மூலதன முதலீட்டு அணுகுமுறையைப் பின்பற்றுகிறது. இந்த தொழில்முனைவோர் பொருளாதார ஏற்ற இறக்கங்களுக்கு எதிராக உறுதியாக நிற்கிறார்கள், மேலும் விரைவான வருவாய்க்கு முன்னுரிமை அளிப்பதை விட நீண்டகால, அர்த்தமுள்ள மாற்றத்தில் கவனம் செலுத்துகின்ற சமூக தாக்கம் மற்றும் நிலைத்தன்மையை முக்கியப்படுத்துகின்றார்கள்.

விவசாய தொழில்நுட்பம், கிராமப்புற வாழ்வாதாரம் மற்றும் நிலையான வணிகங்கள் மீது அரசாங்கம் அதிக கவனம் செலுத்துவதால், The Why Club 2047க்குள் விக்சித் பாரத் ஆக மாறும் இந்தியாவின் பயணத்திற்கு பங்களிக்கும் தாக்கமுள்ள தொடக்க நிறுவனர்களின் அடுத்த தலைமுறைக்கு வளம் சேர்க்க தனித்துவமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டம் டிசம்பர் 2024ல் நடைபெற்ற நெக்ஸ்ட் பில்லியன் ஃபோரத்தில் எதிரொலிக்கப்பட்டது, அங்கு இந்தியாவின் ஜி20 ஷெர்பா மற்றும் நீதி ஆயோக்கின் முன்னாள் 


தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் காந்த், சுஸூகி மோட்டார் கார்ப்பரேஷனின் தலைவர் டோஷிஹிரோ சுஸூகி மற்றும் ஆரின் கேப்பிட்டல் நிறுவனத்தின் தலைவர் மோகன்தாஸ் பை போன்ற முக்கிய தலைவர்கள், உறுதியான மற்றும் தன்னிறைவு சமூகங்களை உருவாக்குகின்றதில் அடிநிலை தொழில்முனைவோரின் முக்கிய பங்கை வலியுறுத்தினர்.

நெக்ஸ்ட் பாரத் வென்ச்சர்ஸ் நிறுவனத்தின் முதல் குழுவானது, கீழ்கண்ட தொடக்க Why Club உறுப்பினர்களை உள்ளடக்கியது: 

ஆக்ரிதி ஸ்ரீவஸ்தவா, பஹுலா நேச்சுரல்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி 


ஐஸ்வர்யா ஜாவர், ஏகட்ரா நிறுவனத்தின் இணை நிறுவனர்


பாபன் தாஸ், GRDT ஃபார்மர்ஸ் நிறுவனத்தின் நிறுவனர்


ஜெயந்தி மஹாபத்ரா, மணிக்ஸ்டு அக்ரோ நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி 


குல்தீப் படேல், ஃபசல் பஜார் நிறுவனத்தின் இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி 


நிவேதிதா ராய், கார்கேவாலே நிறுவனத்தின் இணை நிறுவனர்


பயல் நாத், கடம் ஹாட் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி 


பிரேர்னா அகர்வால், சமக்யா நிறுவனத்தின் நிறுவனர்


ராகேஷ் குப்தா, கிராம்ஸ்ரீ நிறுவனத்தின் நிறுவனர்


சதேந்திரசிங் லில்ஹரே, பஸ்தார் சே பஜார் தக் நிறுவனத்தின் இணை நிறுவனர்


செல்வகுமார் வரதராஜன், வில்ஃப்ரெஷ் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி 


ஷுப்ரா தேவி, மெய்ரா ஃபுட்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி 


சத்யம் பண்டாரி, ஹார்ட் இன் ஹில்ஸ் நிறுவனத்தின் நிறுவனர்

நெக்ஸ்ட் பாரத் நிறுவனத்தின் இரண்டாவது ரெசிடென்சி ப்ரோக்ராம் ற்கான விண்ணப்பங்கள் இப்போது அனைத்து ஆரம்ப நிலை ஆர்வமுள்ள தொழில்முனைவோருக்கும் கிடைக்கின்றன.

நெக்ஸ்ட் பாரத் வென்ச்சர்ஸ் நிறுவனம் பற்றி:  

இந்தியாவின் கிராமப்புற பொருளாதாரம் அல்லது முறைசாரா பொருளாதாரத்தின் ஒரு பகுதியாக இருக்கும் பில்லியன் இந்தியர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க அயராது உழைக்கும் "தாக்கமுள்ள தொழில்முனைவோரை" ஒன்றிணைப்பதற்கான நோக்கத்துடன் நெக்ஸ்ட் பாரத், நிறுவப்பட்டது. ஜப்பான் நாட்டின் சுஸூகி மோட்டார் கார்ப்பரேஷனின் 100% துணை நிறுவனமான நெக்ஸ்ட் பாரத் வென்ச்சர்ஸ் IFSC பிரைவேட் லிமிடெட், 340 கோடி ரூபாய் நிதியைக் கொண்ட, ஆரம்ப கட்ட நோக்கம் சார்ந்த தொழில்முனைவோருக்கு மூலதனம், வழிகாட்டுதல் மற்றும் சந்தை அணுகல் மூலம் ஆதரவை வழங்குவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட  ஒரு நிறுவனமாகும்.

அதன் முதன்மை முயற்சியான "நெக்ஸ்ட் பாரத் ரெசிடென்சி" திட்டத்தின் மூலம், இந்த நிறுவனம் ஒரு சமூக-பொருளாதார பிரச்சினையைத் தீர்ப்பதைப்பற்றிய ஆர்வமுள்ளவராக மட்டுமல்லாமல், தங்கள் தொடக்கநிறுவனங்களை வளர்ப்பதற்கும் அளவிடுவதற்கும் ஒரு வலுவான வணிக நுண்ணறிவையும் சமமாகக் கொண்டுள்ள தாக்கம் சார்ந்த தொழில்முனைவோருக்கான ஒரு முழுமையான ஆதரவு சுற்றுச்சூழலை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த திட்டத்தின் இறுதி நோக்கமானது , கிராமப்புற மற்றும் முறைசாரா பொருளாதாரங்களை பாரதத்தின் வளர்ச்சிப் பயணத்தின் மையமாக மாற்றுவதற்கான முக்கியமான சமூக சவால்களை சமாளிக்க தாக்கமுள்ள தொழில்முனைவோருக்கு அதிகாரமளிப்பதாகும்.