Wednesday, September 9, 2026

2,000 ரோபோடிக் எலும்பியல் அறுவைசிகிச்சைகளைக் கடந்து அப்போலோ மருத்துவமனை சாதனை; தமிழ்நாட்டின் மிகப்பெரிய எலும்பியல் ரோபோடிக் திட்டமாக உருவெடுத்துள்ளது!

2,000 ரோபோடிக் எலும்பியல் அறுவைசிகிச்சைகளைக் கடந்து அப்போலோ மருத்துவமனை சாதனை; தமிழ்நாட்டின் மிகப்பெரிய எலும்பியல் ரோபோடிக் திட்டமாக உருவெடுத்துள்ளது!


*இடமிருந்து வலமாக*

டாக்டர் இளங்குமரன் காளிமூர்த்தி, CEO – சென்னை மண்டலம், அப்பல்லோ மருத்துவமனைகள்

மூத்த எலும்பியல் ரோபோடிக் அறுவை சிகிச்சை நிபுணர்கள் (கிரீம்ஸ் சாலை)

- டாக்டர் நாவலடி சங்கர்

- டாக்டர் அருண் கண்ணன்

- டாக்டர் விஜய் கிஷோர் ரெட்டி

- டாக்டர் கொர்னாட் கொசிகன்

- டாக்டர் மதன் திருவேங்கடம்

- டாக்டர் குணால் படேல்


சென்னை, 9 செப்டம்பர் 2026: சென்னை, கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனை, முழுமையான மற்றும் பகுதி மூட்டு மாற்று அறுவைசிகிச்சைகள், மற்றும் முழுமையான இடுப்பு மாற்று அறுவைசிகிச்சைகள் உட்பட 2,000-க்கும் மேற்பட்ட ரோபோடிக் உதவியுடனான (Robotic-assisted) எலும்பியல் அறுவைசிகிச்சைகளை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளது. இந்த மைல்கல், தொழில்நுட்பம் சார்ந்த மூட்டு மாற்று சிகிச்சையில் மருத்துவமனையின் பயணத்தில் ஒரு முக்கிய படியைக் குறிப்பதுடன், நவீன அறுவைசிகிச்சை அமைப்புகளை மருத்துவ நிபுணத்துவத்துடன் ஒருங்கிணைப்பதில் அதன் வளர்ந்து வரும் அனுபவத்தையும் பிரதிபலிக்கிறது.

ஒவ்வொரு நோயாளியின் தேவைக்கேற்ப மூட்டு மாற்று அறுவைசிகிச்சைகளைத் துல்லியமாகச் செய்ய, ஸ்ட்ரைக்கரின் Mako® SmartRobotics™ தொழில்நுட்பம், 3D CT ஸ்கேன் இமேஜிங் மற்றும் அறுவைசிகிச்சைக்கு முந்தைய விரிவான திட்டமிடல் ஆகியவற்றை இந்தத் திட்டம் ஒருங்கிணைக்கிறது. இந்த தொழில்நுட்பம் நோயாளியின் உடல் அமைப்பு பற்றிய விரிவான தகவல்களை மருத்துவர்களுக்கு வழங்குகிறது. இதன் மூலம் ஒவ்வொரு நோயாளியின் உடல்நிலை மற்றும் மருத்துவத் தேவைகளுக்கு ஏற்ப அறுவைசிகிச்சையைத் திட்டமிட்டுச் செய்ய முடிகிறது. அறுவை சிகிச்சைக்கு முந்தைய திட்டத்தை செயல்படுத்துவதில் ரோபோடிக் கை உதவினாலும், சிகிச்சை முடிவுகளும் அறுவை சிகிச்சை தொடர்பான தீர்மானங்களும் அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவரிடமே இருக்கும்.

முழங்கால் மற்றும் இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்ளும் நோயாளிகளுக்கு, ரோபோ உதவியைப் பயன்படுத்துவது மிகக்குறைந்த அளவு கீறல்களைக் கொண்ட அறுவை சிகிச்சை முறைக்கு உதவுவதோடு, ஒட்டுமொத்தமாக சிறந்த சீரமைப்பு மற்றும் துல்லியம், விரைவாக குணமடைதல் மற்றும் பொருத்தப்படும் சாதனங்களின் மேம்பட்ட ஆயுட்காலம் உள்ளிட்ட பல நன்மைகளைப் பெறவும் பங்களிக்கும். அறுவைசிகிச்சை மருத்துவர்களுக்கு, குறிப்பாக சிக்கலான மூட்டு மாற்று அறுவை சிகிச்சைகளைக் கையாளும் போது, உடற்கூறியலை மதிப்பிடவும், எலும்பைத் தயார்படுத்துவதைத் திட்டமிடவும், மற்றும் அறுவை சிகிச்சையின் போது சீரான தன்மையைப் பராமரிக்கவும் இந்தத் தொழில்நுட்பம் கூடுதல் கருவிகளை வழங்குகிறது.

இந்தச் சாதனையின் ஒரு பகுதியாக, முதுநிலை எலும்பியல் ரோபோடிக் அறுவைசிகிச்சை நிபுணர்களான டாக்டர் அருண் கண்ணன், டாக்டர் கோர்னாட் கோசிகன், டாக்டர் குணால் பட்டேல், டாக்டர் நாவலடி சங்கர், டாக்டர் விஜய் கிஷோர் ரெட்டி மற்றும் டாக்டர் மதன் திருவேங்கடம் ஆகியோர் சிறப்புரையாற்றினர். ரோபோடிக் உதவியுடனான மூட்டு மாற்று அறுவைசிகிச்சையின் பரிணாம வளர்ச்சி மற்றும் மிகவும் துல்லியமான, தனிப்பயனாக்கப்பட்ட சிகிச்சை வழங்குவதில் மேம்பட்ட தொழில்நுட்பத்தின் பங்கு குறித்து அவர்கள் விளக்கினர்.

அப்போலோ மருத்துவமனையின் (கிரீம்ஸ் சாலை) முதுநிலை எலும்பியல் ரோபோடிக் அறுவைசிகிச்சை நிபுணர் டாக்டர் அருண் கண்ணன் தனது சிறப்புரையில் கூறியதாவது: "2,000 ரோபோடிக் எலும்பியல் அறுவைசிகிச்சைகளைக் கடந்திருப்பது எங்கள் குழுவிற்கு ஒரு பெரிய மைல்கல்லாகும். ரோபோடிக் மூட்டு மாற்று சிகிச்சையில் பல ஆண்டுகளாக நாங்கள் பெற்றுள்ள அனுபவத்தை இது காட்டுகிறது. சிக்கலான பல சிகிச்சைகள் உட்பட, நாங்கள் செய்துள்ள பல்வேறு வகையான மூட்டு மற்றும் இடுப்பு மாற்று அறுவைசிகிச்சைகள் இந்தச் சாதனையை மிகவும் சிறப்பானதாக ஆக்குகின்றன. ஒவ்வொரு நோயாளிக்கும் ரோபோடிக் உதவியை எந்த அளவுக்கு, எப்படிச் சிறப்பாகப் பயன்படுத்தலாம் என்பதைப் புரிந்துகொள்ள இந்த அனுபவம் எங்களுக்கு உதவியுள்ளது. இனி வருங்காலங்களில் இந்த நிபுணத்துவத்தை மென்மேலும் வளர்த்து, எலும்பியல் சிகிச்சையில் ரோபோடிக் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை விரிவுபடுத்துவோம். நோயாளிகளுக்குப் பாதுகாப்பான, துல்லியமான மற்றும் சிறந்த சிகிச்சையை வழங்குவதில் எங்கள் கவனம் தொடரும்."

இந்நிகழ்ச்சியில் பேசிய அப்போலோ மருத்துவமனைகளின் (சென்னை மண்டலம்) தலைமைச் செயல் அதிகாரி டாக்டர் இளங்குமரன் காளியமூர்த்தி கூறியதாவது: "மருத்துவ சிகிச்சைகளில் தொழில்நுட்பத்தின் அர்த்தமுள்ள முன்னேற்றங்களைக் கொண்டு வருவதில் அப்போலோ மருத்துவமனையின் தொடர்ச்சியான கவனத்தை இந்த மைல்கல் பிரதிபலிக்கிறது. அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள், மேம்பட்ட தொழில்நுட்ப அமைப்புகள் மற்றும் சிறப்பான பராமரிப்புச் சூழல் ஆகியவற்றை ஒன்றிணைப்பதே எங்கள் அணுகுமுறையின் பலமாகும். எங்கள் திறன்களை நாங்கள் விரிவுபடுத்தும் அதே வேளையில், நோயாளிகளின் பராமரிப்பிற்கு மதிப்பு சேர்க்கும் மற்றும் சிறந்த அறுவைசிகிச்சை முடிவுகளை வழங்குவதில் எங்கள் மருத்துவர்களுக்கு ஆதரவளிக்கும் தொழில்நுட்பங்களைப் பின்பற்றுவதில் எங்கள் கவனம் தொடர்ந்து இருக்கும்."


இந்தச் சாதனை, பல்வேறு மருத்துவத் துறைகளில் ரோபோடிக் உதவியுடன் அறுவைசிகிச்சை செய்வதில் அப்போலோ மருத்துவமனை பெற்றுள்ள பரந்த அனுபவத்தின் ஒரு பகுதியாகும். பிப்ரவரி 2026-ல், அப்போலோ மருத்துவமனை 8,000 ரோபோடிக் அறுவைசிகிச்சைகளைக் கடந்ததாக அறிவித்தது. இது மேம்பட்ட அறுவைசிகிச்சைத் திறன்களில் அப்போலோவின் நீண்டகால முதலீட்டை எடுத்துக்காட்டுகிறது. கிரீம்ஸ் சாலை மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட 2,000-க்கும் மேற்பட்ட ரோபோடிக் எலும்பியல் சிகிச்சைகள், தொழில்நுட்பம் சார்ந்த மூட்டு மற்றும் இடுப்பு மாற்றுச் சிகிச்சைகளில் அப்போலோவின் நிபுணத்துவத்தை மேலும் வலுவாக்குகின்றன.

அப்போலோ மருத்துவமனைகள் பற்றி: 1983 ஆம் ஆண்டு சென்னையில் டாக்டர் பிரதாப் ரெட்டி முதல் மருத்துவமனையைத் தொடங்கிய போது, அப்போலோ சுகாதாரத் துறையில் ஒரு பெரிய புரட்சியை ஏற்படுத்தியது. இன்று, 78 மருத்துவமனைகள், 10,900-க்கும் மேற்பட்ட படுக்கைகள், 7,200+ மருந்தகங்கள், 300+ கிளினிக்குகள் மற்றும் 2,500 நோயறிதல் மையங்களைக் கொண்ட உலகின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த சுகாதார சேவையாக அப்போலோ விளங்குகிறது. 3,00,000-க்கும் மேற்பட்ட ஆஞ்சியோபிளாஸ்டி மற்றும் 2,00,000 அறுவைசிகிச்சைகளைச் செய்துள்ள இது, உலகின் முன்னணி இருதய சிகிச்சை மையங்களில் ஒன்றாகும். நோயாளிகளுக்கு உலகின் தலைசிறந்த சிகிச்சைகள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக, அதிநவீன தொழில்நுட்பங்கள், உபகரணங்கள் மற்றும் சிகிச்சை முறைகளைக் கொண்டுவர அப்போலோ தொடர்ந்து ஆராய்ச்சிகளிலும், கண்டுபிடிப்புகளிலும் முதலீடு செய்து வருகிறது. அப்போலோவின் 1,20,000 குடும்ப உறுப்பினர்களும் நோயாளிகளுக்குச் சிறப்பான அக்கறையுடன் சிகிச்சை அளித்து, இந்த உலகத்தை ஆரோக்கியமானதாக மாற்ற அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகின்றனர். மேலும் விவரங்களுக்கு: www.apollohospitals.com