ஏர்டெல் ‘பிரையாரிட்டி போஸ்ட்பெய்டு’ சேவையை அறிமுகப்படுத்தியது – வாடிக்கையாளர்களுக்கு மேம்பட்ட நெட்வொர்க் அனுபவம் வழங்கும் புதிய முயற்சி 5G நெட்வொர்க்கை ஸ்லைசிங் தொழில்நுட்பத்துடன் மேம்படுத்தி, போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களுக்கு உயர்ந்த சேவைத் தரமும் தடையற்ற இணைப்பும் வழங்கப்படுகிறது
Chennai, மே 19, 2026: பார்தி ஏர்டெல் இன்று ‘பிரையாரிட்டி போஸ்ட்பெய்டு’ என்ற புதிய சேவையை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. 5G ஸ்லைசிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் இந்த சேவை, போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களுக்கு மேலும் மேம்பட்ட மற்றும் நிலையான நெட்வொர்க் அனுபவத்தை வழங்குகிறது. வேலை, பொழுதுபோக்கு அல்லது ஆன்லைன் ஒத்துழைப்பு போன்ற தேவைகளுக்காக இடையறாத இணைப்பை நம்பும் பிஸியான வாடிக்கையாளர்களை கருத்தில் கொண்டு இந்த சேவை உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த சேவைக்காக, ஏர்டெல் தனது 5G நெட்வொர்க்கை மேம்பட்ட ஸ்லைசிங் தொழில்நுட்ப திறன்களுடன் மேம்படுத்தியுள்ளது. இதன் மூலம் நெட்வொர்க் செயல்திறன் அதிகரிக்கிறது, கூடுதல் கொள்ளளவு உருவாகிறது மற்றும் அந்த கொள்ளளவை ‘பிரையாரிட்டி’ வாடிக்கையாளர்களுக்கு உயர்ந்த அனுபவத்தை வழங்கும் வகையில் துல்லியமாக பயன்படுத்தும் திறனும் கிடைக்கிறது. நெட்வொர்க் கொள்ளளவை புத்திசாலித்தனமாகவும் தன்னியக்கமாகவும் பிரித்து நிர்வகிப்பதன் மூலம், அதிக பயன்பாட்டு நேரங்களிலும் போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களுக்கு நிலையான மற்றும் நம்பகமான இணைப்பு அனுபவத்தை ஏர்டெல் வழங்குகிறது.
கடந்த ஒரு ஆண்டில், அமெரிக்கா, சிங்கப்பூர், ஐக்கிய இராச்சியம் மற்றும் மலேசியா உள்ளிட்ட பல நாடுகளில் ஸ்லைசிங் அடிப்படையிலான 5G சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் இத்தகைய சேவையை முதன்முறையாக அறிமுகப்படுத்தியுள்ளது ஏர்டெல். இது, மேலும் புத்திசாலித்தனமான, வலுவான மற்றும் எதிர்காலத் தேவைகளுக்கு தயாரான டிஜிட்டல் நெட்வொர்க்கை உருவாக்க ஏர்டெல் தொடர்ந்து மேற்கொண்டு வரும் முதலீட்டையும், மேம்பட்ட தொழில்நுட்பத்தை வாடிக்கையாளர் மையப்படுத்தப்பட்ட புதுமைகளுடன் இணைக்கும் அதன் உறுதிப்பாட்டையும் வெளிப்படுத்துகிறது.
இந்த அறிமுகம் குறித்து ஏர்டெல் நிறுவனத்தின் MD and CEO, ஷஷ்வத் சர்மா கூறியதாவது: “வாடிக்கையாளர்களின் அனுபவத்தை மேம்படுத்தும் அர்த்தமுள்ள புதுமைகளை வழங்குவதில்தான் ஏர்டெல்லின் கவனம் உள்ளது. 5G ஸ்லைசிங் தொழில்நுட்பத்தின் ஆதரவுடன் உருவாக்கப்பட்ட எங்களின் சமீபத்திய புதுமைதான் ‘பிரையாரிட்டி போஸ்ட்பெய்டு’. போக்குவரத்து நெரிசலின் போது வாடிக்கையாளர் அழைப்பில் கலந்து கொண்டாலும், மக்கள் கூட்டம் நிறைந்த இசை நிகழ்ச்சியில் ஸ்ட்ரீமிங் செய்தாலும் அல்லது பரபரப்பான சந்தையில் காப் முன்பதிவு செய்தாலும், எங்கள் வாடிக்கையாளர்களுக்கு இது உயர்ந்த, நிலையான மற்றும் நம்பகமான அனுபவத்தை வழங்குகிறது.”
ஏர்டெல்லின் அனைத்து போஸ்ட்பெய்டு திட்டங்களிலும் ‘ஏர்டெல் பிரையாரிட்டி’ சேவை கிடைக்கிறது. தற்போதைய வாடிக்கையாளர்கள் இந்த நன்மையை தானாகவே பெறத் தொடங்குவார்கள். பிரீபெய்டு வாடிக்கையாளர்கள் அல்லது ‘ஏர்டெல் பிரையாரிட்டி’ போஸ்ட்பெய்டுக்கு மாற்ற விரும்பும் வாடிக்கையாளர்கள், Airtel App அல்லது ஏதேனும் Airtel ஸ்டோரின் மூலம் எளிதாக மாற்றிக்கொள்ளலாம்.
பிரையாரிட்டி போஸ்ட்பெய்டு திட்டங்கள்
மாத கட்டணம் திட்ட வகை சலுகைகள் உள்ளடக்கம்
449 + GST தனிநபர் Fastlane தொழில்நுட்பத்துடன் 5G பிரையாரிட்டி சேவை
மோசடி கண்டறிதல் மற்றும் ஸ்பாம் அலர்ட் சேவைகள்
வரம்பற்ற டேட்டா மற்றும் அழைப்புகள்
3000 SMS - Airtel Xstream Play
- Adobe Express Premium
- 100 GB Cloud Storage
699 + GST 2 பேர் குடும்ப திட்டம் மேலே குறிப்பிடப்பட்ட அனைத்து சலுகைகளும் + Amazon Prime + Jio Hotstar
999 + GST 3 பேர் குடும்ப திட்டம் மேலே குறிப்பிடப்பட்ட அனைத்து சலுகைகளும் + Apple TV + Apple Music
1199 + GST 4 பேர் குடும்ப திட்டம்
1749 + GST 5 பேர் குடும்ப திட்டம் மேலே குறிப்பிடப்பட்ட அனைத்து சலுகைகளும் + Netflix
வாடிக்கையாளர்கள், சமீபத்திய மென்பொருள் அப்டேட்டுகளுடன் கூடிய எந்த 5G SA ஆதரவு கொண்ட ஸ்மார்ட்போனிலும் எங்களின் பிரையாரிட்டி சேவையை பயன்படுத்தலாம். அப்டேட் நிலுவையில் உள்ள வாடிக்கையாளர்கள், தங்களது மொபைல் ‘Settings’ பகுதியில் அதற்கான அறிவிப்பை காணலாம். மேலும், Airtel App மூலம் தங்களது மொபைல் Airtel Priority சேவைக்கு தயாராக உள்ளதா என்பதையும் வாடிக்கையாளர்கள் சரி பார்க்கலாம்