Wednesday, October 9, 2024

ஏர்டெல்லின் AI-இயங்கும் நெட்வொர்க் தீர்வு தமிழ்நாட்டிலுள்ள வாடிக்கையாளர்கள் ஸ்பேம் அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்களுக்கு விடைபெற வழிவகை செய்துள்ளது

ஏர்டெல்லின் AI-இயங்கும் நெட்வொர்க் தீர்வு தமிழ்நாட்டிலுள்ள வாடிக்கையாளர்கள் ஸ்பேம் அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்களுக்கு விடைபெற வழிவகை செய்துள்ளது

அனைத்து சாதனங்களிலும் ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு ஆட்டோமேட்டிக் ஆக்டிவேஷனுடன் கட்டணமில்லாமலேயே தீர்வு

சென்னை, அக்டோபர் 9, 2024: பாரதி ஏர்டெல்லின் புதிய AI-ஆற்றல்பெற்ற ஸ்பேம் கண்டறியும் அமைப்பு தமிழக வாடிக்கையாளர்களுக்கு மிகவும் தேவைப்படும் ஒரு நிவாரணத்தை வழங்கியுள்ளது. தொடங்கப்பட்ட 12 நாட்களில் இந்த முன்னோடி தொலைத்தொடர்பு தீர்வு தமிழ்நாட்டில் 112 மில்லியன் நிகழும் சாத்தியம் கொண்ட ஸ்பேம் அழைப்புகளையும் 3 மில்லியன் ஸ்பேம் SMS செய்திகளையும் வெற்றிகரமாகக் கண்டறிந்து தடுத்துள்ளது.

மாநிலத்தில் உள்ள அனைத்து ஏர்டெல் மொபைல் வாடிக்கையாளர்களும் இப்போது சேவையைக் கோரவோ அல்லது செயலியைப் பதிவிறக்கவோ தேவையில்லாமல் இலவச தீர்வுக்கான ஆட்டோமேட்டிக் அணுகலைப் பெறலாம்.

இந்த அறிமுகத்தைக் குறித்து பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் தமிழ்நாடு தலைமைச் செயல் அதிகாரி தருண் விர்மாணி கூறும்போது, “இன்றைய டிஜிட்டல் லேண்ட்ஸ்கேப்பில் ஸ்பேம் அழைப்புகளும் சந்தேகத்திற்குரிய உரைகளும் வாடிக்கையாளர்களுக்கு பெரிய அளவில் கவலைதரும் விஷயமாக உள்ளன. இதற்குத் தீர்வுகாண ஏர்டெல் நிறுவனம் ஏர்டெல் எக்கோசிஸ்டத்தில் தங்குதடை இல்லாமல் இயங்கும் ஒருங்கிணைக்கப்பட்ட நவீன AI-ஆற்றல்பெற்ற ஒரு தீர்வை அறிமுகப்படுத்தியுள்ளது. கூடுதல் பதிவிறக்கமோ அல்லது சிக்கலான அமைப்புகளோ தேவை இல்லாமல் இந்தத் தீர்வு பயனர்களுக்கு நன்மைகளை வழங்குகிறது. தீங்கிழைப்போர்க்கு பலியாவதைப் பற்றி கவலைப்படாமல் தமிழ்நாட்டில் உள்ள 29.8 மில்லியன் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் சிறந்த மன அமைதியுடன் இருக்க இது உதவுகிறது. இந்தப் புதுமையான சலுகையின் மூலம் ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி நம்பிக்கைக்குரிய தொலைத்தொடர்பு பார்ட்னராக தொழில்துறையில் ஒரு புதிய தரத்தை உருவாக்கியுள்ளது” என்றார்.

ஏர்டெல்லின் தரவு விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட AI-ஆற்றல் பெற்ற இந்தத் தீர்வு அழைப்புகள் மற்றும் SMS-களை "சந்தேகத்திற்குரிய ஸ்பேம்" என அடையாளம் காணவும் வகைப்படுத்தவும் காப்புரிமை பெற்ற அல்காரிதத்தைப் பயன்படுத்துகிறது. அதிநவீன AI அல்காரிதம் மூலம் இயங்கும் நெட்வொர்க், அழைப்பாளர் அல்லது அனுப்புநரின் பயன்பாட்டு முறைகள், அழைப்பு/SMS அலைவரிசை மற்றும் அழைப்புக் காலம் போன்ற பல்வேறு அளவுருக்களை நிகழ்நேர அடிப்படையில் பகுப்பாய்வு செய்கிறது. ஏற்கெனவே அறியப்பட்ட ஸ்பேம் முறைகளுக்கு எதிராக இந்தத் தகவலை கிராஸ்-ரெஃபரன்சிங் செய்வதன் மூலம் சந்தேகத்திற்குரிய ஸ்பேம் அழைப்புகள் மற்றும் SMS களை இந்த அமைப்பு துல்லியமாக அடையாளம் காண்கிறது. 

இந்தத் தீர்வில் இரண்டு வடிகட்டிகளைக் கொண்ட இரட்டை அடுக்கு பாதுகாப்பு உள்ளது. ஒன்று நெட்வொர்க் லேயரிலும் இரண்டாவது ஐடி சிஸ்டம்ஸ் லேயரிலும் உள்ளன. ஒவ்வொரு அழைப்பும், SMS-உம் இந்த இரட்டை அடுக்கு AI கவசம் வழியாகச் செல்கின்றன. இரண்டு மில்லி விநாடிகளில் 1.5 பில்லியன் செய்திகளையும் 2.5 பில்லியன் அழைப்புகளையும் இந்தத் தீர்வு செயலாக்கம் செய்கிறது. AI இன் ஆற்றலைப் பயன்படுத்தி நிகழ்நேர அடிப்படையில் 1 டிரில்லியன் பதிவுகளைச் செயலாக்கம் செய்வதற்கு இது சமம்.

மேலும் SMS மூலம் பெறப்பட்ட தீங்கிழைக்கும் இணைப்புகள் குறித்து வாடிக்கையாளர்களை இத்தீர்வு எச்சரிக்கிறது. இதற்காக ஏர்டெல் பிளாக்லிஸ்ட் செய்யப்பட்ட URL-களின் மையப்படுத்தப்பட்ட தரவுத்தளத்தை உருவாக்கியுள்ளது. மேலும் சந்தேகத்திற்குரிய இணைப்புகளை தற்செயலாக கிளிக் செய்வதில் இருந்து பயனர்களை எச்சரிப்பதற்காக அதிநவீன AI அல்காரிதம் மூலம் ஒவ்வொரு SMS உம் நிகழ்நேரத்தில் ஸ்கேன் செய்யப்படுகிறது. இந்தத் தீர்வால் அடிக்கடி நிகழும் IMEI மாற்றங்கள் போன்ற முரண்பாடுகளைக் கண்டறிய முடியும். இது மோசடியான செயல்பாட்டின் பொதுவான குறிகாட்டியாகும். இந்தப் பாதுகாப்பு நடவடிக்கைகளை அடுக்கடுக்காக அமைப்பதன் மூலம் ஸ்பேம் மற்றும் மோசடி அச்சுறுத்தல்களின் பெருகி வரும் லேண்ட்ஸ்கேப்புக்கு எதிராக அதன் வாடிக்கையாளர்கள் அதிகபட்ச பாதுகாப்பைப் பெறுவதை நிறுவனம் உறுதி செய்கிறது.

இந்தியாவின் AI ஆற்றல்பெற்ற ஸ்பேம் இல்லாத நெட்வொர்க் எப்படி வேலை செய்கிறது?

எடிட்டருக்குக் குறிப்பு

சேவை மற்றும் பரிவர்த்தனை அழைப்புகளுக்காக இந்திய அரசு (GoI) 160 என்ற முன்னொட்டுடன் 10 இலக்க எண்களை ஒதுக்கியுள்ளது. வங்கிகள், மியூச்சுவல் ஃபண்டுகள், காப்பீட்டு நிறுவனங்கள், பங்குத் தரகர்கள், பிற நிதி நிறுவனங்கள், கார்ப்பரேட்கள், நிறுவனங்கள், SMEகள், பரிவர்த்தனை மற்றும் சேவை அழைப்புகளைச் செய்வதற்குப் பயன்படுத்தப்படும் பெரிய மற்றும் சிறு வணிகங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இந்த 160 என்ற முன்னொட்டுத் தொடர்களில் இருந்து வாடிக்கையாளர்கள் அழைப்புகளைப் பெறுவது எதிர்நோக்கக்கூடியதே.


மேலும் தொந்தரவு செய்யாதீர் (DND) என்பதைத் தேர்வு செய்யாத அல்லது விளம்பர அழைப்புகளைப் பெறுவதற்கு குழுசேர்ந்த வாடிக்கையாளர்கள் 140 என்ற முன்னொட்டுடன் 10 இலக்க எண்ணில் இருந்து அவற்றைப் பெறுவார்கள்.