Wednesday, August 7, 2024

எம்ஜிஎம் ஹெல்த்கேர் – ல் கோமாவிலிருந்து விழித்தெழுந்த 51 வயதான பெண்: மூளைக்கட்டிக்கு புரட்சிகர அறுவைசிகிச்சை!

எம்ஜிஎம் ஹெல்த்கேர் – ல் 

கோமாவிலிருந்து விழித்தெழுந்த 51 வயதான பெண்: மூளைக்கட்டிக்கு புரட்சிகர அறுவைசிகிச்சை! 

கர்ப்பப் பை அகற்றலுக்கான அறுவைசிகிச்சையின்போது முதுகுத்தண்டில் போடப்பட்ட மயக்க மருந்து ஊசிக்குப் பிறகு கோமா நிலைக்கு சென்ற இந்நோயாளிக்கு அறிகுறியற்ற மூளை கட்டி இருப்பது கண்டறியப்பட்டது 

சென்னை: ஜுலை 7, 2024: இந்தியாவில் பிரபல மருத்துவமனையான எம்ஜிஎம் ஹெல்த்கேர், மண்டையோட்டின் அடிப்பகுதியில் கண்டறியப்பட்ட உயிருக்கு ஆபத்தான கட்டியை அறுவைசிகிச்சையின் மூலம் வெற்றிகரமாக அகற்றி மருத்துவ வரலாற்றில் ஒரு சிறப்பான சாதனை நிகழ்த்தப்பட்டதை அறிவித்திருக்கிறது.  அந்தமானைச் சேர்ந்த 51 வயதான பெண்ணுக்கு மேற்கொள்ளப்பட்ட இந்த புரட்சிகர மருத்துவ செயல்முறை, நோயாளிகளுக்கு மிக நேர்த்தியான விளைவுகளை உறுதி செய்கின்ற சிகிச்சையை வழங்குவதில் இம்மருத்துவமனை கொண்டிருக்கும் அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது.  

எம்ஜிஎம் ஹெல்த்கேர் – ன் நரம்பியல் அறுவைசிகிச்சை துறையின் இயக்குனர் டாக்டர். ரூபேஷ் குமார் வழிகாட்டலில் இயங்கிய மருத்துவர்கள் குழுவில் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்களான டாக்டர். எல்.எஸ் ஹரீஷ்சந்திரா மற்றும் டாக்டர். சரண்யன் மற்றும் நரம்பியல் சார்ந்த மயக்க மருந்தியல் நிபுணர் டாக்டர். அருள்செல்வன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.  அந்த நோயாளியான திருமதி. ஷீலா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), நினைவுத்திறனிழந்த கோமா நிலையில் அந்தமானில் இருந்த ஒரு தனியார் மருத்துவமனையிலிருந்து சென்னை, எம்ஜிஎம் ஹெல்த்கேர் -க்கு விமானத்தின் மூலம் சிகிச்சைக்காக கொண்டு வரப்பட்டிருந்தார். 

தனிப்பட்ட ஒரு பிரச்சனைக்காக கர்ப்பப் பையை நீக்கும் அறுவைசிகிச்சையை செய்தபிறகு அவரது மண்டையோட்டின் அடிப்பகுதியில் 8 செ.மீ. அளவு கொண்ட பெரிய மூளைக்கட்டி இருப்பது தெரிய வந்தது.  முதுகுத்தண்டில் மயக்க மருந்து செலுத்தும் முறையைப் பயன்படுத்தி, அந்தமானில் மருத்துவர்கள் மேற்கொண்ட அறுவைசிகிச்சை வெற்றியடைந்த போதிலும், முதுகுத்தண்டில் செலுத்தப்பட்ட மயக்க மருந்தை தொடர்ந்து, மூளையில் திரவ இயங்கியலில் ஏற்பட்ட மாற்றமானது, மூளையின் அழுத்தத்தில் திடீர் அதிகரிப்பை ஏற்படுத்தியது.  மூளையில், மூளை பிதுங்கலையும், கோமா எனப்படும் உணர்விழப்பையும் இது உருவாக்கியது.  

கர்ப்பப்பை அகற்றல் அறுவைசிகிச்சை செய்ததிலிருந்து  2 நாட்களுக்குள் இப்பெண் அதிக களைப்படைந்ததுடன், உணர்விழப்பு நிலைக்கு தள்ளப்பட்டார்.  அந்தமானிலிருந்த மருத்துவர்கள் செய்த மூளை ஸ்கேன் பரிசோதனை, அப்பெண்ணின் மண்டையோட்டிற்குள் ஒரு பெரிய கட்டி இருப்பதை காட்டியது.  இப்பெண்ணின் உடல்நிலை குறித்து கவலைப்பட்ட உறவினர்கள், எம்ஜிஎம் ஹெல்த்கேர் - ன் நரம்பியல் அறுவைசிகிச்சை குழுவை, சிகிச்சை ஆலோசனைக்காக தொடர்புகொண்டனர். மூளை கட்டி அகற்றல் அறுவைசிகிச்சைக்காக அந்தமானிலிருந்து சென்னைக்கு உடனடியாக விமானத்தில் அழைத்து வருமாறு எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். 

இங்கு வந்து சேர்ந்தவுடன் நோயாளியின் உயிரைக் காப்பாற்றுவதற்கு ஒரே வாய்ப்பாக கருதப்பட்ட அவசரநிலை மூளைக்கட்டி அகற்றல் அறுவைசிகிச்சையை செய்ய மூளை நரம்பியல் அறுவைசிகிச்சையியல் துறை நிபுணர்கள் முடிவு செய்தனர். மூளையின் வலதுபுறத்தில் முக்கிய இரத்தநாளங்கள் இருக்கும் பகுதியில் கண்டறியப்பட்ட 8 செ.மீ. அளவுள்ள கட்டியினை அகற்ற ஒரு சிக்கலான மண்டையோடு அடிப்படையிலான அணுகுமுறையை டாக்டர். ரூபேஷ்குமார் மற்றும் அவரது குழுவினரும் பயன்படுத்தினர்.   கட்டியைச் சுற்றியிருந்த இரத்தநாளங்களுக்கு பாதிப்பில்லாமல், அவற்றை தக்கவைக்கும் விதத்தில் இந்த அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.  

இந்த அறுவைசிகிச்சை குறித்து தனது எண்ணங்களைப் பகிர்ந்துகொண்ட டாக்டர். ரூபேஷ் குமார் கூறியதாவது: “இந்த கட்டியின் அளவின் காரணமாகவும் மற்றும் குறைந்திருந்த மூளை அழுத்தத்தினாலும் இச்சிகிச்சை செயல்முறையில் கணிசமான சிக்கல்கள் இருந்தன; நுட்பமான திட்டமிடலும், துல்லியமும் இச்சிகிச்சையில் அவசியமான அம்சங்களாக இருந்தன. மேம்பட்ட அறுவைசிகிச்சை உத்திகள் மற்றும் மிக நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்திய நாங்கள், மூளைக்கட்டியை துல்லியமாக அணுகி அதனை முழுமையாக அகற்றுவதில் வெற்றி கண்டோம். பெரிய திரவத் தேக்கத்தின் காரணமாக,  இந்நோயாளியின் மூளையின் வலது பகுதி வீங்கிய நிலையில், இடதுபுறம் நோக்கி அழுத்தி சாய்க்கப்பட்டு, உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையை உருவாக்கியிருந்தது.  உரிய நேரத்திற்குள் இம்மருத்துவமனைக்கு அவர் அழைத்து வரப்பட்டதனால், அவரது உயிரைக் காப்பாற்ற உதவியிருக்கிறது.  ஒரு நாள் தாமதித்திருந்தாலும், உயிருக்கு ஆபத்தாக மாறியிருக்கும்.  தற்போது இந்நோயாளி, மீட்சி நம்பிக்கையளிப்பதாக இருப்பது எங்களது பயனளிக்கும் திறனை பிரதிபலிக்கிறது.” நரம்பியல் அறுவைசிகிச்சையில் தொடர்ச்சியான முன்னேற்றங்களின் முக்கியத்துவம் மற்றும் முக்கியமான மருத்துவக் குழுவின் திறனும், அர்ப்பணிப்பும் இந்த சிகிச்சை நேர்வில் வலுவாக வெளிப்பட்டிருக்கிறது.  இந்நோயாளியின் எதிர்காலம் குறித்து நாங்கள் அதிக நம்பிக்கையோடு இருக்கிறோம் மற்றும் தொடர்ந்து அவர் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு ஆதரவளிப்பதற்கு உதவியிருக்கிறது.” 

அறுவைசிகிச்சைக்குப் பிறகு 5வது நாளன்று, திருமதி ஷீலா மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.  அந்தமானுக்கு திரும்பவும் பயணிப்பதற்கு மேலும் ஒரு வார காலம் கண்காணிப்பில் இருக்குமாறு அவருக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.  மிக நவீன மருத்துவ சாதனங்கள், தொழில்நுட்ப வசதிகளுடன் உரிய நேரத்தில் சிறந்த சிகிச்சையை வழங்கிய எம்ஜிஎம் ஹெல்த்கேர் நிர்வாகத்தையும், ஷீலாவின் குடும்பத்தினர் பாராட்டி தங்களது நன்றியை தெரிவித்துக் கொண்டனர். 

About MGM Healthcare:

Born out of a need for altruism, MGM Healthcare is obsessed with bettering patient experiences and improving clinical outcomes through expertise, passion and technology. The manifestation of this dedication to superlative health-caring is a state-of-the-art hospital on Nelson Manickam Road having 400 beds, 50 out-patient consultation rooms, over 100 critical care beds, 250+ Doctors, 12 Centers of excellence, 30+ Clinical Departments, 12 state-of-the-art Operating Theatres and 24 x 7 comprehensive Emergency Care. Here, a host of eminent surgeons and physicians wield a potent combination of skill and cutting-edge technology to elevate care and outcomes to new levels. MGM Healthcare is the first hospital in Asia with the highest rated USGBC LEED Platinum-certified Green Hospital.

Over the past year, the team of clinical experts at MGM Healthcare have performed many innovative and complex surgeries in the pursuit of establishing trust and clinical excellence. MGM Healthcare designed and equipped with the latest in technology and equipment is poised to drive patient centricity and clinical excellence of both the domestic and international patients.