Wednesday, August 21, 2024

தலைச்சிறந்த இயக்கம், அசத்தலான ஒளிப்பதிவு உள்ளிட்ட 5 முக்கிய காரணங்களுடன், நட்பு முதல் விடா முயற்சி என்றால் என்ன என்பதை வெளிபடுத்தி தென்ந்திய திரையுலகையே அசத்திய மஞ்சுமேல் பாய்ஸ் திரைப்படம் கட்டாயம் பார்க்க வேண்டிய படங்கள் பட்டியலில் டாட்டா பிளே லிஸ்டில் இடம் பெற்றுள்ளது

தலைச்சிறந்த இயக்கம், அசத்தலான ஒளிப்பதிவு உள்ளிட்ட 5 முக்கிய காரணங்களுடன், நட்பு முதல் விடா முயற்சி என்றால் என்ன என்பதை வெளிபடுத்தி தென்ந்திய திரையுலகையே அசத்திய மஞ்சுமேல் பாய்ஸ் திரைப்படம் கட்டாயம் பார்க்க வேண்டிய படங்கள் பட்டியலில் டாட்டா பிளே லிஸ்டில் இடம் பெற்றுள்ளது.

டாட்டா பிளே தமிழ் சினிமா ஆகஸ்ட் 24ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரையில் மஞ்சு மேல் பாய்ஸ் பிரீமியர் காட்சிகள் உடன் உயிர் மற்றும் நட்பின் பிடிவாதமான கதையை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. தேசத்தையே திரும்பி பார்க்க வைத்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, தென்னிந்தியாவின் பிளாக்பஸ்டர் மூவியாக பார்வையாளர்களை விறுவிறுப்புடன் கவர்ந்த கதை தளம் ஆகும். இப்படம் விமர்சன ரீதியான பாராட்டுகளை பெற்றது மட்டுமல்லாமல், 2024 ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த படங்களில் ஒன்றாகவும் உருவெடுத்து உள்ளது. மஞ்சு மேல் பாய்ஸ் திரைப்படம் பொழுது போக்குக்கு மட்டுமல்லாமல், பாதுகாப்பான சாக சுற்றுலா பற்றிய முக்கியமான கதை களத்துடன் வெளிவந்து, சக்தி வாய்ந்த சமூக தாக்கம் கொண்ட திரைப்படமாக பார்க்கப்பட்டது. இந்த எட்ஜ் ஆப் யுவர் சீட் டிராமாவை தவற விடாதீர்கள் என்றும், 1502 என்னில் Tata Play தமிழ் சினிமாவில் வாடிக்கையாளர்கள் காணலாம்.


உண்மை கதையை அடிப்படையாக கொண்டது: 


2006 ஆம் ஆண்டு கேரளாவை சேர்ந்த நண்பர்கள் குழு தமிழகத்தின் கொடைக்கானலில் உள்ள குணா குகைகளுக்குள் நுழைந்த போது, எதிர்பாராத விதமாக நடந்த ஒரு நிஜ வாழ்க்கை சம்பவத்தை மஞ்சு மேல் பாய்ஸ் திரைப்படம் கதை ஆக்கியிருந்தது. குகைகளுக்கு அருகில், அழகிய இயற்கை காட்சிகளுக்கு இடையே அமைதியான விடுமுறையை நண்பர்களோடு அனுபவிப்பதற்காக சென்று கொண்டிருந்த போது, அவர்களில் ஒருவர் எதிர்பாராத விதமாக அந்த குகை நூல் சிக்கிக் கொள்கிறார். புகையினுள் சிக்கிக் கொள்ளும் நண்பரை சக நண்பர் மீட்கும் நிகழ்வுகளை தத்ரூபமாக சித்தரித்தது கதைக்கு கூடுதல் சுவாரசியத்தை ஏற்படுத்தி, பார்வையாளர்களை வெகுவாக ஈர்த்த திரைப்படம் இந்த திரைப்படம்.


இந்த திரைப்படத்தில் நடித்த நடிகர்கள், சௌபின் ஷாகிர், ஸ்ரீநாத் பாசி, பாலு வர்கீஸ், கணபதி உள்ளிட்ட நட்சத்திர பட்டாளம் ஆகும். திரையில் அவர்கள வெளிப்படுத்திய நடிப்பு பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்திருந்தது. குறிப்பாக ஐந்து பேரும் ஒவ்வொருவர் மீது வைத்திருந்த நட்பு, பார்ப்பவர்களை பிரமிக்க வைத்தது. ஒவ்வொருவரின் கதாபாத்திரமும் நிஜ வாழ்க்கை சகாக்களுடன் நெருக்கமாக வாழ்ந்து பழகியது போன்ற உணர்வை பார்வையாளர்களுக்கு அளித்துள்ளது. நண்பர் ஒருவர் குகைக்குள் சிக்கியதும், அவரை மீட்பதற்காக போராடிய ஒவ்வொரு நண்பர்களின் உணர்வும் பார்வையாளர்களுக்கு பெரும் விறுவிறுப்பை ஏற்படுத்தியது. நண்பர்களாக நடித்த ஐந்து நபர்களும் பார்க்கும் பார்வையாளர்கள் ஒவ்வொருவராலும் உணர்ச்சி பூர்வமாக பாராட்டப்பட்டனர். இத்திரைப்படத்தின் மூலம் மஞ்சுமேல் பாய்ஸ் திரைப்படம் அனைவரும் விரும்பி பார்க்கும் திரைப்படமாக மாறியது. 


தலைசிறந்த இயக்கம்: 


மஞ்சு மேல் பாய்ஸ் திரைப்படத்தின் இயக்குனர் சிதம்பரம் எஸ். பொடுவால், இத் திரைப்படத்தின் மூலம் கேமராவுக்கு பின்னால் இருந்து திறமையை வெளிப்படுத்தி இருப்பதோடு மட்டுமல்லாமல், நட்பு, விடாமுயற்சி என சஸ்பென்ஸ் நிறைந்த திரில்லர் திரைப்படத்தை திரையுலகிற்கு வெளிப்படுத்தியு. திரைப்படத்தைப் பார்க்கும் ஒவ்வொரு நிமிடமும் பார்வையாளர்களுக்கு பதற்றத்தையும், விறுவிறுப்பையும் சிறிதளவும் குறைவில்லாமல் அளித்தது மட்டுமல்லாமல், தென்னிந்திய திரை உலகில் குறிப்பிடத்தக்க இயக்குனர் என்ற முத்திரையை பதித்துள்ளார். 


அசத்தலான ஒளிப்பதிவு: 


ஒளிப்பதிவாளர் சைஜு காலித் பிரபலமற்ற கொடைக்கானல் நிலப்பரப்பின் அழகையும் ஆபத்தையும் படம் பிடித்து இருப்பதன் மூலம் படத்தின் ஒவ்வொரு காட்சிகளும் தனித்துவமாக வெளிப்பட்டிருக்கின்றன. தமிழகத்தை இயற்கை காட்சிகள் மற்றும் ஆபத்தான குகைகள் நிறைந்த காட்சிகளையும் இதில் படம் பிடித்து காண்பிக்கப்பட்டிருக்கிறது. இது குகையில் உள்ள கிளாஸ்ரோபோபிக் மற்றும் பதற்றமான காட்சிகளை எதார்த்தமாக சித்தரித்தது, திரைப்படத்தில் நடித்த ஒவ்வொரு கதாபாத்திரத்தின் சூழ்நிலைகளையும் பார்வையாளர்களுக்கு தத்ரூபமாக காண்பிக்கப்பட்டுள்ளது. இதுவே திரைப்படம் வெற்றி அடைய, காட்சிகள் ஒவ்வொன்றும் திரைப்படத்தை காணும் பார்வையாளர்கள் மனதில் ஆழமாக பதிய வைத்துள்ளது.  


நட்பு மற்றும் வாழ்வியல் முறையின் உலகளாவிய கதை: 


நண்பர்களிடையே உள்ள நட்பு, தியாக உணர்வு ஆகியவற்றை ஒரு குறிப்பிட்ட சம்பவத்தில் வெளிப்படுத்தப்பட்டு பார்வையாளர்களை ஈர்க்க வைத்திருப்பதன் மூலம் நட்பின் உணர்வை கருப்பொருளாக வைத்து மஞ்சு மேல் பாய்ஸ் திரைப்படம் வெளிப்படுத்தி உள்ளது. 


ஆகஸ்ட் 24ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை டாட்டா ப்ளே தமிழ் சினிமாவில் மஞ்சு மேல் பாய்ஸ் திரைப்படத்தை வாடிக்கையாளர்கள் கண்டு ரசிக்கலாம்.